×

விமானத்தில் இயந்திர கோளாறு 170 பயணிகள் உயிர் தப்பினர்

சென்னை: துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக்கோளாறு உரிய நேரத்தில் கோளாறை விமானி கண்டுபிடித்ததால், 170பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட இருந்தது. இதில் 169 பயணிகள், ஊழியர்கள் உள்பட 175 பேர் பயணம் செய்ய தயார் நிலையில் இருந்தனர். விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன், இயந்திரங்களை தலைமை விமானி சரிபார்த்தார்.

அப்போது விமான இயந்திரத்தில் பெருமளவு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இதனால் அந்த விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. நள்ளிரவு 11.30 மணிக்கு மேலாகியும் பழுதுபார்க்கும் பணிகள் முடிவடையவில்லை.இதனால் அந்த விமானம் ரத்து என அறிவிக்கப்பட்டது. இதனால் 169 பயணிகளுக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. பின்னர் அவர்களை வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் உரிய நேரத்தில் கோளாறு கண்டு பிடிக்கப்பட்டதால் 170 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.


Tags : Engine failure in flight, passengers, Chennai airport
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...