×

இலங்கையிலிருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

ராமநாதபுரம் : பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கையில் இருந்து 3 சிறார்கள் உட்பட 6 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழவழியின்றி படகு மூலம் தனுஷ்கோடிக்கு வருகை தருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையியல் நேற்று கிளிநொச்சி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 6 பேர் படகின் மூலம் ஆபத்தான முறையில் படகு பயணம் மேற்கொண்டு இன்று காலை தனுஷ்கோடி வந்தடைந்தனர். 6 பேரை கண்ட அப்பகுதி மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் 6 பேரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் இலங்கையிலிருந்து அகதிகளாக தனுஷ்கோடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அகதிகளாக வந்த 6 பேரையும் மண்டப முகாமிற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் அகதிகள் 6 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

ஏற்கனவே இலங்கையிலிருந்து 30 குடும்பத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக மண்டப முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : danushkodi , 6 more refugees from Sri Lanka sheltered in Dhanushkodi!
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...