நிலக்கோட்டை : கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் பேரூராட்சி 13வது வார்டுக்குட்பட்டது ஜெகநாதபுரம் AD காலனி கிழக்கு தெரு. இங்கு அதிக குடியிருப்புகள் உள்ள பகுதியில் மின்கம்பம் ஒன்று, சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் சிமெண்ட்கள் உதிர்ந்து கம்பிகள் தெரியுமளவிற்கு பழுதாகி, தற்போது ஆடி மாத காற்றில் அசைந்து ஆடுவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வரும் மழைக்காலம் துவங்கும் முன் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் ஊன்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.