மதுரை: காவல்துறையினர் ஏற்கெனவே அதிக அழுத்தத்தில் உள்ளனர்; அவர்களது குடும்பத்தினரும் அழுத்தத்தில் உள்ளனர் என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. இந்நிலையில் ரூ.10 கோடி இல்லை என அவர்களுக்கான மன அழுத்தத்தை குறைக்க நலத்திட்டம் செயல்படாமல் வைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு ஆகஸ்ட் 4-க்கு ஒத்திவைக்கப்பட்டது.