திருப்பதி: திருப்பதி கோயில் அருகே ஆரணியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சரவணன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கோயில் பின்புறம் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா அருங்காட்சியகம் எதிரே ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டிருந்தார். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு குடியாத்தத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.