கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆம்ப்ரோஸ் டிப்ளின் கெல்வின் (45) நேற்று சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து கண்டனர் மூலம் பொருட்கள் ஏற்றிக்கொண்டு தச்சூர் கூட்டு சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றபோது நான்கு வாலிபர்கள் லாரி அருகே கண்ணாடி உடைத்துள்ளனர்.
இதனை தட்டிக் கேட்ட லாரி டிரைவரிடம் மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ஒரு செல்போன், 2000 ரூபாய் பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து மேற்கண்ட நபர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் (23),சஞ்சய் (19)ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர் . மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.