×

கள்ளக்குறிச்சி மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை: இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் சென்னையில் நேற்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குடும்ப வன்முறைக்கு எதிராக சிறப்பு மாநாடு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. இப்பள்ளியின் முக்கிய நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்களோடு நெருங்கியவர்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதில் தாமதம் கடைப்பிடிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். மேலும் மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.

Tags : Kallakurichi ,Marxist , Kallakurichi student, Rs 25 lakh relief, Marxist party
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...