×

ஒரு அதிகாரியும் மதிக்கல... உபி.யில் அமைச்சர் பதவி விலக முடிவு: கடிதம் வைரல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் துறை அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக ஜல்சக்தி துறை இணை அமைச்சர் காதிக் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஜல்சக்தி துறை இணை அமைச்சராக இருப்பவர் காதிக். தனது துறை அதிகாரிகள் தன்னை புறக்கணிப்பதாக காதிக் குற்றம்சாட்டி உள்ளார். தன்னை ஒருவரும் மதிப்பது இல்லை என்றும், அதிகாரிகள் புறக்கணிப்பதால் அரசு பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதன் காரணமாக, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக காதிக்கிடம் கேட்டபோது, ‘அதுபோன்று எந்த பிரச்னையும் இல்லை,’ என்று கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

Tags : UP ,minister , UP Minister, decision to resign, letter goes viral
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...