சென்னை: தேவர் மக்கள் இயக்கம் நிறுவனர்- தலைவர் சங்கிலி மாரிப்பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விஷயத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிட்டும், தாளாளர் உள்ளிட்ட மூவரை கைது செய்தும், அமைதி திரும்ப உரிய நடவடிக்கை எடுத்து வரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாணவி ஸ்ரீமதியை இழந்து வாடும் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் நிதி வழங்குவதுடன், அவரது பெற்றோரை நேரில் அழைத்து ஆறுதல் சொல்ல முதல்வர் வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.