காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகர பகுதி திமுக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் படிவத்தினை பெற்று உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். காஞ்சிபுரம் தெற் கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக 15வது உட்கட்சி தேர்தலை ஒட்டி காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள நான்கு பகுதி தேர்தல்கள் வேட்பு மனு தாக்கல் வருகிற 21.7.2022 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெறுகிறது. அப்போது, திமுக தலைமை கழகத்தால் தேர்தல் ஆணையராக நிர்ணயிக்கப்பட்டுள்ள ஈரோடு பிரகாஷ்யிடம் இடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திமுக தலைமை அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்கிய விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.