நாகை: பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் பேச்சுக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஓ.எஸ்.மணியன் நாகை அதிமுக அலுவலகத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூறினார்.