×

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பொக்லைன் மோதி பெண் பரிதாப பலி

பெரம்பூர்: கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர், 6வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இவர்கள் இருவரும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து, கடையில் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். நேற்று வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, குப்பைகளை அகற்றும் பொக்லைன் இயந்திரம் இடித்து பார்வதி தூக்கி வீசப்பட்டு மயங்கினார்.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் வந்து பார்த்தபோது, பார்வதி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பொக்லைனை இயக்கிய ஒப்பந்த ஊழியரான கோயம்பேடு பகுதியை சேர்ந்த கதிர்வேலை (33) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bokline ,Kodungayur , Woman tragically killed in Kodungaiyur garbage dump
× RELATED பொக்லைன் உரிமையாளருக்கு ₹18 ஆயிரம் இழப்பீடு