பள்ளிப்பட்டு: சீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில். இங்கு நேற்று முன்தினம் குரு பௌர்ணமி கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை அடுத்து நேற்று பாபாவுக்கு உகந்த நாளான வியாக்கிழமை காலை முதல் மாலை வரை பாலாபிஷேகம், உள்ளிட்ட தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. இதே நேரத்தில் நித்திய அக்னி குண்டம் எரியூட்டும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து, திருக்கோயில் சீரமைப்பு உபயதாரர்கள் நகரியைச் சேர்ந்த ரமேஷ்குமார், விஜயலட்சுமி தம்பதிகள் துணி எரியூட்டுதல் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று சீரடி சாய்பாபாவை வழிபட்டனர். திருக்கோயில் தலைவர் குமாரசாமி மற்றும் நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.