×

பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் 12 ஆடுகள் திருட்டு: சிசிடிவி காட்சிகளை வைத்து மூன்று மர்ம நபர்களுக்கு வலை

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே ஆடுகளின் கால்களை கட்டி லாவகமாக திருடும் சிசிடிவி காட்சிகள். காரில் வந்து ஆட்டுபட்டியில் இருந்து 12 ஆடுகளை திருடிய மர்ம கும்பல். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை. செய்து வருகின்றனர் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியில் ரகுமான்கான் என்பவர் ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் இறைச்சிக்காக மொத்தமாக ஆடு, கோழிகளை வாங்கி வந்து பட்டியில் அடைத்து வைத்து விற்பனை செய்து வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை தமது கடைக்கு வந்தபோது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு, பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. உடனே, உள்ளே சென்று பார்த்தபோது அதில் 12 ஆடுகள் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ரகுமான்கான் ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆடுகள் திருடப்பட்ட சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒருவன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்கின்றான்.

ஆடுகளை பிடித்து ஆட்டின் கழுத்தில் காலை வைத்து கொடூரமாக மிதித்து கொண்டு, ஆட்டின் கால்களை கட்டி வைக்கிறான். மற்றொருவன், காரை தயாராக வைத்துள்ளான். கால்கள் கட்டப்பட்ட நிலையில் உள்ள ஆடுகளை  மேலும் ஒருவன், ஒவ்வொன்றாக கொண்டு சென்று காரில் வைத்து விட்டு, கடையின் ஷட்டரை மீண்டும் இறக்கிவிட்டு காரில் தப்பித்து செல்கின்றனர். இந்த காட்சியை ஆதாரமாக வைத்து ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது சம்பந்தமாக  ஆடு திருடிய 3 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Tags : Arani ,Periyapalayam , 12 goats stolen from Arani near Periyapalayam: CCTV footage nabs three suspects
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...