மதுரை: கரூர் மாவட்டத்தில் பொன்னர் சங்கர் நாடகம் நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது. இந்தியா அரசியலமைப்பு சட்ட அடிப்படையிலேயே இயங்குகிறது; கருத்துரிமை, பேச்சுரிமையில் தலையிட இயலாது. நீதிமன்றம் தணிக்கை வாரியமாக செயல்பட இயலாது என நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு தெரிவித்தனர்.