கடலூர்: கடலூரில் தவத்திரு ஊரன் அடிகள் (90) உடல்நலக்குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் காலமானார். திருச்சியில் பிறந்த ஊரன் அடிகள் தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறிகளை பற்றி ஆராய்ச்சி செய்தவர். பல நூல்களை எழுதியுள்ள தவத்திரு ஊரன் அடிகளின் இறுதிச் சடங்கு வடலூரில் இன்று நடைபெறுகிறது.