×

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனாவில் இருந்து நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் :ஓபிஎஸ்

சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்று பதிவிட்டிருந்தார். இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் கொரோனாவில் இருந்து மீண்டு வர பலரும் தங்கள் வாழ்த்துக்களையும், விருப்பத்தையும் கூறி வருகின்றனர்.

இஇந்நிலையில் முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Tags : God ,Chief Minister ,M.K.Stalin ,Corona , Central, BJP Government, Palaniswami, RS Bharati
× RELATED தண்ணீர்… தண்ணீர்…