நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப் பகுதிகளில் காளாச்சேரி, சித்தமல்லி, மேலபூவவனூர், பெரம்பூர், அனுமந்தபுரம், ஒளிமதி, தேவங்குடி, ராயபுரம், காளாஞ்சிமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி மின் மோட்டார் மூலம் முன்கூட்டியே குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சில கிராமங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் குறுவை சாகுபடியை தற்போது தொடங்கியுள்ளனர். முன் கூட்டியே நிலத்தடி நீரை மின் மோட்டாரில் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது மேல பூவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேல் உரம் இடும் பணியை மும்முரமாக தொடங்கியுள்ளனர்.