×

செம்பட்டி அருகே காதலியிடம் பேசிய கொத்தனார் கொலை-காதலியின் தந்தை கைது, அண்ணனுக்கு வலை

சின்னாளபட்டி : செம்பட்டி அருகே காதலியிடம் பேசிய கொத்தனாரை கொன்ற காதலியின் அண்ணன் தலைமறைவானார். இவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டை பேரூராட்சி, சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்த பழனிச்சாமி. மகன் அழகுவிஜய் (24). கொத்தனார். அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் அஜித்குமார் (26). கூலித்தொழிலாளி. அஜீத்தின் தங்கையான 17 வயது கல்லூரி மாணவியும், அழகு விஜய்யும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களது காதல், மாணவி வீட்டாருக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அழகுவிஜய்யும், அப்பெண்ணும் சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக தெரிகிறது. இதையறிந்து அங்கு வந்த அஜித்குமார், தங்கையை கண்டித்ததுடன், அவர் கண் முன்பே அழகுவிஜய்யை கடுமையாக தாக்கினார். நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய்யை கழுத்தில் மிதித்துள்ளார். இதில் அழகுவிஜய் துடிதுடித்து இறந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அழகுவிஜய்யின் உடலை சேடபட்டி அருகில் உள்ள தோட்டத்தில் மறைத்து வைத்துவிட்டு, தனது தந்தையான தமிழ்செல்வனுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் இருவரும் ஒரு சாக்கு பையில் அழகுவிஜய்யின் உடலை மூட்டை கட்டி, அதனை டூவீலரில் எடுத்து வந்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிவிட்டு திரும்பி சென்று விட்டனர். நேற்று காலையில் அஜித்குமார் வீட்டின் அருகில் ரத்தத்துளிகள் இருப்பதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை சம்பவம் பற்றி தெரிய வந்தது. பின்னர் தமிழ்செல்வன் கொடுத்த தகவலின்பேரில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சாக்கு மூட்டையில் இருந்து அழகுவிஜய்யின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தை எஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி முருகேசன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீசார், தமிழ்செல்வனை கைது செய்தனர். தப்பிய அஜித்குமாரை தேடி வருகின்றனர்.

Tags : Sempatti , Chinnalapatti: The girlfriend's brother who killed the mason who was talking to his girlfriend near Sempatti has absconded.
× RELATED திண்டுக்கல்லில் பரபரப்பு!:...