×

மறைமலைநகரில் பரபரப்பு கள்ளக்காதலி கத்தியால் குத்தி படுகொலை: கள்ளக்காதலன் கைது

செங்கல்பட்டு: மறைமலைநகரில் கள்ளக்காதலியை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் கள்ளக்காதலன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் சாமியார் கேட் சாய்பாபா கோயில் தெருவில் வசித்து வந்தவர் ஜோதி (எ) அஞ்சலாட்சி (36). இவரது  கணவர்  முருகேசன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் உயிரிழந்தார். மறைமலைநகர் மெல்ரோசாபுரம் பகுதியை சேர்ந்த  முனியசாமி (40). திருமணமான இவர் முருகேசனின் நண்பர். ஜோதிக்கு 17, 14 வயதில் மகன், மகள் உள்ளனர். முனியசாமிக்கும், ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடும்பத்தை பிரிந்து, ஜோதி வீட்டிலேயே தங்கி அவருடன் முனியசாமி குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஜோதியின் நடத்தையில் முனியசாமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், கடந்த 8ம் தேதி, ஜோதியை கத்தியால் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு மறைமலைநகர் காவல்நிலையத்தில் முனியசாமி சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிந்து முனியசாமியை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜோதி நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, போலீசார் முனியசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Tags : Thiramalayanagar , Thieves stabbed to death in Thiramalayanagar: Thieves arrested
× RELATED மறைமலைநகரில் கார், ஆட்டோ பயங்கர மோதல்: 3 பேர் படுகாயம்