ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கேதையுறம்பு, இடையகோட்டை, மலைப்பகுதிகளான பால்கடை, வண்டிப்பாதை, கண்ணணூர் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் நடவு செய்துள்ளனர். கடந்த மாதம் கிலோ ரூ.15க்கு விற்பனையான மிளகாய், தற்போது வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ மிளகாய் ரூ.40க்கு மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான டன் மிளகாய் லாரிகள் மூலம் கேரளா, தமிழ்நாட்டின் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. வரத்து குறைவால் மிளகாய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.