×

ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள்பணியிட மாற்றம் செய்ய ப்பட்டுள்ளனர்.  தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக இருந்த பவானீஸ்வரி லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனகராகவும், சென்னை அமலாக்கப்பிரிவு  ஐஜியாக இருந்த துரை குமார் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாகவும், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாகவும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.


Tags : Home , IPS Officers, Transfer, Home Secretary
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு