சென்னை: சென்னை துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். துறைமுக போக்குவரத்து அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் வாடகை உயர்த்தி வழங்காததை கண்டித்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.