×

சீர்காழி அருகே திருவாலி ஏரி நிரம்புகிறது: விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி: சீர்காழி அருகே திருவாலி கிராமத்தில் சுமார் 132 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது.இந்த ஏரி 17 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு வரும் தண்ணீரை பயன்படுத்தி திருவாலி புதுத்துறை, திருநகரி மண்டபம், நெப்பத்தூர், தென்னாம்பட்டினம் கிராமங்களில் சுமார் 12,000 ஏக்கரில் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தாண்டு மேட்டூர்அணை பாசனத்திற்கு மே 24 தேதி திறக்கப்பட்ட நிலையில் தற்போது திருவாலி ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் வந்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் சில நாட்களில் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஏரி விரைவாக நிரம்பி வருவதால் விவசாயிகள் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : Lake Tiruvali ,Siragazhu , Tiruvalli Lake near Sirkazhi fills up: Farmers happy
× RELATED சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு