சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்றனர்.