ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே காரை கூட்ரோட்டில் உள்ள ஆதரவற்றோருக்கான குழந்தைகள் விடுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். முதலமைச்சர் திடீரென ஆய்வுக்கு சென்றபோது அரசு விடுதியின் கண்காணிப்பாளர் பணியில் இல்லை. பணி நேரத்தில் விடுதியில் இல்லாத அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார். அதன்பேரில் மையத்தின் கண்காணிப்பாளரை சமூகநலத்துறை சஸ்பெண்ட் செய்தது.