ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து அகதிகளாக ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவில் கடற்கரை பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் தஞ்சம் அடைந்துள்ளனர்.கடும் குளிரில் வந்ததால் மயங்கிய நிலையில் இருந்த வயதான கணவன், மனைவியை மீட்டு முதலுதவி அளிக்கப்படுகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் ஏற்கனவே 90 பேர் தமிழகம் வந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் வந்துள்ளனர்.