கொடைக்கானல் : கொடைக்கானலில் வெள்ளைப்பூண்டு நடவு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு மலை கிராமங்களில் காலநிலைக்கு ஏற்ப பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், பட்டாணி, அவரை, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது வெள்ளைப்பூண்டு அதிகளவில் விவசாயம் செய்து வருகின்றனர். வில்பட்டி, பள்ளங்கி, பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வெள்ளைப்பூண்டு நடவு பணி தீவிரமாக செய்து வருகின்றனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் நடவு பணியும் தற்போது தாமதமாகி வருவதாக விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.