சென்னை: தமிழகத்தில் ஜூன் 13 முதல் 17ம் தேதி வரை ரேஷன் பொருள் கடத்தல் தொடர்பாக 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.2063 குவிண்டால் அரிசி, 45 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை ஆந்திர எல்லையில் நடத்தப்பட்ட சோதனையில் 470.50 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது