சென்னை: திட்டமிட்டபடி 100 சதவீதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று என அதிமுக மூத்த நிர்வாகி பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் பொது தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக ஒற்றைத் தலைமைக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என தெரிவித்தார். தேர்தல் முடிவுக்கும் ஒற்றைத் தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறினார்.