×

காலிறுதியில் பிரணாய்

ஜகர்தா: இந்தோனேசியா  தலைநகர் ஜகர்தாவில் ‘ஈஸ்ட் வென்ட்சர்ஸ் ஓபன்’ பேட்மின்டன் போட்டி நடக்கிறது.இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற முன்னணி வீரர்கள்  சாய் பிரனீத், லக்‌ஷயா சென் , கிடாம்பி காந்த், வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் முதல் சுற்றிலும்,  சமீர் வர்மா நேற்று 2வது சுற்றிலும் தோற்று வெளியேறினர். இரட்டையர் கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும் அதே நிலைமைதான்.இந்நிலையில் இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரர்  எச்.எஸ்.பிரணாய் நேற்று 2வது சுற்றில் ஹாங்காங் வீரர்  கா லாங் ஆங்குஸ் உடன் மோதினார். அதில் பிரணாய்  21-11, 21-18 என்ற புள்ளி கணக்கில் அடுத்தடுத்து 2 செட்களையும் கைப்பற்றினார். அதனால் 41 நிமிடங்களில்  2-0  என நேர் செட்களில் கா லாங்கை வீழ்த்தி  காலிறுதிக்கு முன்னேறினார். இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவரும் 2வது சுற்றுடன் தோற்று வெளியேறிய நிலையில் பிரணாய் காலிறுதிக்கு முன்னேறி இந்திய பேட்மின்டன் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளார்.



Tags : Prenai , Pranay in the quarter
× RELATED ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: இந்திய...