பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வந்தது.
இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
நேற்று காலை கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. எனவே சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிப்பதாக தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் தெரிவித்தார்.