நாகை: நாகை பட்டினச்சேரியில் சாலையில் மீன்களை கொட்டி மேலத்தெரு மீனவர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கருத்து வேறுபாட்டால் மீன்களை விற்கக் கூடாது என கீழத்தெரு மீனவர்கள் கூறியதை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மீன்பிடி இறக்குதளத்தில் சமஉரிமை வழங்க கோரி நடக்கும் மறியல் காரணமாக மீனவர்கள், ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.