சென்னை: உயிரிழந்த விசாரணை கைதி ராஜசேகரனின் பிரேத பரிசோதனை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தொடங்கியது. நேற்று முன்தினம் சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு விசாரணைக்காக ராஜசேகர் என்பவர் அழைத்து சென்றார்.
அதனையடுத்து நேற்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை காவல் துறையினர் தனியார் மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பயனளிக்காமல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் விசாரணை கைதிகள் காவல்துறையினரால் அடித்து கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கும் மாற்றப்பட்டது. மேலும் இன்று காலை முதல் நீதிபதி லட்சுமி தனது விசாரணையை தொடங்கின. அதன் ஒரு பகுதியாக நீதிபதி லட்சுமி முன்னிலையில் ராஜசேகரனின் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது.