சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தீவிர ஆலோசனை நடத்துகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, அரசு அமைத்த குழு இன்று முதல் ஒரு வாரம் ஆலோசனை செய்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதி இழப்பு , தற்கொலை குறித்த ஆபத்தை கண்டறியும் தன்மை குறித்து ,ஆராய்ந்து இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.