×

பொன்னேரி ரயில் நிலையத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: மாணவர்கள் அட்டகாசம்

பொன்னேரி: ரயில் நிலையத்தில் பட்டாசு வெடித்து அட்டகாசம் செய்த 7 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பொன்னேரியில் உலக நாத நாராயணசாமி அரசினர் கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நேற்று முன்தினம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக  பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்கள் மூலம் பேண்டு வாத்தியம் முழங்க ரயில் நிலையத்திற்கு மாணவர்கள் வந்தனர்.தொடர்ந்து மாணவர்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் பட்டாசு சரவெடிகள் வெடித்து   ஆட்டம் ஆடி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த ஆர்பிஎப் காவலர் இதனை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி ரயில்வே போலீசார் எளாவூரை சேர்ந்த ரஞ்சித்  ஜார்ஜ், காயலர்மேடு பகுதியை சேர்ந்த சஞ்சய், ரஞ்சித், அஜித், மகேஷ் மேலும் ஒரு ரஞ்சித் உள்ளிட்ட 7 மாணவர்களை கைது செய்தனர். அத்துடன் 75 கிராம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் ஆபத்தான முறையில் தண்டவாளம் மற்றும் படியில் பயணம் செய்தது, பயணிகளை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Ponneri railway station , Ponneri railway station, fireworks display, students cheer
× RELATED சென்னை – கும்மிடிப்பூண்டி...