×

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ம் தேதி ஸ்டிரைக்: வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம்..!!

டெல்லி: 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஜூன் 27ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், தேசிய வங்கி ஊழியர்கள் அமைப்பு உள்ளிட்ட 9 சங்கங்களை உள்ளடக்கிய வங்கி சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பு இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, நிலுவை தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். நாடு முழுவதும் 7 லட்சம் வங்கி பணியாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.


Tags : 5-point demand, public sector bank employees, strike
× RELATED 2025-26ம் ஆண்டில் இருந்து சிபிஎஸ்இயில்...