×

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் ஜமாபந்தி: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1431ம் ஆண்டுக்கு வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) நடத்திடவும், கிராம கணக்குகளை தணிக்கை செய்திடவும் கீழ்கண்டவாறு வருவாய் தீர்வாயம் அலுவலர்கள் நியமனம் செய்து மற்றும் தணிக்கை தேதிகள் நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் ஆர்.கே.பேட்டை பகுதியில் கலெக்டர் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14 ஆகிய 5 நாட்கள் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதேபோல் ஆவடியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14 ஆகிய 5 நாட்கள், பூந்தமல்லியில் திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15 ஆகிய 6 நாட்கள், பொன்னேரியில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23, 24, 28, 29, 30 ஆகிய 15 நாட்கள், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15, 16 ஆகிய 7 நாட்கள், திருத்தணியில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21 ஆகிய 9 நாட்கள், த்துக்கோட்டையில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15, 16 ஆகிய 7 நாட்கள், திருவள்ளூரில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) தலைமையில் ஜூன் 7, 8, 9, 10, 14, 15, 16, 17, 21, 22, 23, 24 ஆகிய 12 நாட்கள், பள்ளிப்பட்டில் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் ஜூன் 7, 8, 9, 10 ஆகிய 4 நாட்களும் நடைபெற உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பொதுமக்கள் முன்னதாகவே தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். வருவாய் தீர்வாயத்திற்கு முன்னர் அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது வருவாய் தீர்வாயம் ஒன்று என குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக கள ஆய்வு ஏதும் தேவைப்படின் அதனை மேற்கொண்டு வருவாய் அலுவலர் அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே நடைபெறவுள்ள வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) நிகழ்ச்சியை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Jamabandi ,Tiruvallur district , Jamabandi from today in Tiruvallur district: Collector information
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...