×

தேர்வெழுத அனுமதிக்க கோரி குழந்தையுடன் மாணவி திடீர் தர்ணா: வாலாஜாவில் பரபரப்பு

வாலாஜா:  ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஆயிலம் குமணந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோபி (30). இவரது மனைவி காமாட்சி(25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் காமாட்சி வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த சில மாதங்களாக பிரசவ விடுப்பில் இருந்த காமாட்சி, குழந்தை பெற்ற பின்பு மீண்டும் கல்லூரிக்கு நேற்று வந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம், நீண்ட விடுப்பு எடுத்ததால் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காமாட்சி, கைக்குழந்தையுடன் தேர்வு எழுத அனுமதிக்க கோரி  கல்லூரி வளாகத்தில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் கல்லூரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு அலுவலருக்கு, மாணவி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டி கடிதம் எழுதி கல்லூரி முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக நிர்வாகத்தினர் உறுதியளித்தனர். அதன் பின் மாணவி காமாட்சி கைக்குழந்தை மற்றும் கணவருடன் அங்கிருந்து சென்றார்.

Tags : Walaja , Student suddenly darna with child seeking permission to take exam: agitation in Walaja
× RELATED இந்துக்களுக்கு விரோதமான கட்சிதான் பாஜ: திருமாவளவன் பேட்டி