சென்னை: கடலுர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தை கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆபத்தை உணராமல் குளிப்போரை தடுக்க தமிழ்நாடு அரசு பாதுகாப்பு எற்படுகளை மேற்கொள்ள வேண்டும். நீர் நிலைகளில் ஆபத்தை உணராமல் குளிப்போரை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.