குத்தாலம்,ஜூன் 5: மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலை என்பதால் இந்த சாலையின் வழியே ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் குத்தாலம் காவல் நிலையம், பெட்ரோல் பங்க், ஸ்டேட் பாங்க், மிக அருகில் சாலையின் ஜல்லி கற்கய் பெயர்ந்து, மேடு பள்ளங்கள் காணப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இரவு நேரங்களில் பயணம் மேற்கொள்ளும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளதாகவும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.