×

எஸ்இடிசி-ஐஓசி இணைந்து 22 டெப்போக்களில் 300 மரக்கன்று நடல்

சென்னை: அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு 1,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழகம் முழுவதும் 22 இடங்களில் டெப்போக்களும், ஒரு பழுதுநீக்கும் மையமும் உள்ளது. இங்கு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று 300 மரக்கன்றுகள் நடப்பட்டது. மரக்கன்றுகளை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசி) வழங்கியது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்இடிசியின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் கலந்து கொண்டு மரக்கன்றை நட்டு வைத்தார்.

Tags : SEDC-IOC , 300 saplings planted in 22 depots jointly by SEDC-IOC
× RELATED எஸ்இடிசி-ஐஓசி இணைந்து 22 டெப்போக்களில் 300 மரக்கன்று நடல்