×

மே மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயிலில் 28 லட்சம் பேர் பயணம்: நிறுவனம் தகவல்

சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. கடந்த மே 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மொத்தம் 47,87,846 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக மே 26ம் தேதி மட்டும் 1,91,720 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், ஏப்ரல் மாதத்தை காட்டிலும் மே மாதத்தில் 2,41,516 பயணிகள் அதிகபட்சமாக பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் மே மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 11,58,093 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 28,64,124 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டில் 2020 செப்டம்பர் மாதம் முதல் 20% கட்டண தள்ளுபடி வழக்கம்போல் வழங்கி வருகிறது. பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 2021 பிப்ரவரி முதல் 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டையை விற்பனை செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட முகவர்களாக விருப்பம் உள்ளவர்கள் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டு அலுவலரை அணுகலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Tags : Metro , 28 lakh commuters on Metro train in May alone: ​​Company Information
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய...