திருவந்தபுரம்: முல்லை பெரியாறு அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். முதல்போக சாகுபடிக்கு வினாடிக்கு 200 கனஅடி, குடிநீர் தேவைக்காக 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பால் பேரணை முதல் கள்ளந்தரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டது.