×

படப்பையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பூபட்டிபூ சந்தாஸ்(42). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தாம்பரம்  அடுத்த கீழ்படப்பை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு மனைவி, இரண்டு குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளான். பின்னர் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்துள்ளான். இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து உதவி ஆணையாளர் ரவி உத்திரவின் பேரில், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் போலீசார், பூபட்டிபூ சந்தாஸ் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது வீட்டுல் 10 கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதனால் பூபட்டிபூ சந்தாஸ் கைது செய்து அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மணிமங்கலம் போலீசார், அவனை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 


Tags : Odisha ,Padappai , Odisha youth arrested for selling cannabis to college students in Padappai: 10 kg of cannabis seized
× RELATED ஒடிசா முதல்வருக்கு ரூ71 கோடி சொத்து