டெல்லி: நீட் தேர்வு எழுத நாடு முழுவதும் 18,72,339 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட 2.57 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 1,42,286 பேர் விண்ணப்பம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.