சென்னை: தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தினார். ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.