சென்னை: பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 5 தேசிய விருதுகளும், 12 மாநில விருதுகளும் பெற்றுள்ளார். ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருதும் பெற்றுள்ளார். 86 வயதான சுசீலாவின் தபால் தலையை ஒன்றிய அரசின் தபால்துறை வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள சுசீலா வீட்டில் நடந்தது. விசாகப்பட்டினம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஏ.வெங்கடேஸ்வரலு வெளியிட்டார். துணை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்கள் பாலசரஸ்வதி, நாகத்திகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பி.சுசீலா ‘இந்த நிகழ்வு எனக்கு ஆனந்தத்தை தருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் பத்மபூஷன் விருது பெறுவதற்கு சிபாரிசு செய்தார். அவரை இப்போது நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன். எல்லா விருதுகளையும் விட எல்லோரும் என்னை அம்மா என்று அழைப்பதையே உயர்வாக கருதுகிறேன்’ என்றார்.