×

காங்கயம் அருகே பயங்கரம் லாரிகள் மோதி தீப்பற்றி எரிந்தது 2 டிரைவர்கள் உடல் கருகி பலி

காங்கயம்: காங்கயம் அருகே லாரிகள் மோதி தீ பிடித்து எரிந்ததில் 2 டிரைவர்கள் உடல் கருகி பலியாகினர். கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களுடன் கன்டெய்னர் லாரி ஒன்று தூத்துக்குடி செல்ல காங்கயம் வழியாக தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. குண்டடம் பிரிவு அருகே நேற்று மாலை 3 மணி அளவில் வந்தபோது, தாராபுரத்தில் இருந்து காங்கயம் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், 2 லாரிகளும் தீப்பிடித்து, எரிந்தது. அப்போது தீயில் கருகி கன்டெய்னர் லாரி டிரைவர் மைசூர் மாவட்டம், ஹேப்பால் லோகநாயக நகரைச் சேர்ந்த பிரபாகரன் (40) பலியானார். தகவல் அறிந்து வந்த காங்கயம் தீயணைப்புத்  துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மற்றொரு லாரி டிரைவர் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரைச் சேர்ந்த கார்த்தி (40), மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிளீனர் ரூபிலால்(22)  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு கார்த்தி உயிரிழந்தார்.


Tags : Kangayam , Terrible lorries collided near Kangayam and caught fire 2 drivers body burnt to death
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது