×

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து: ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி என்ற பகுதியில் செயல்பட கூடிய எஸ்விடி எனப்படும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசிற்கு தேவையான ரசாயன கலவை மூலக்கூறுகள் தயாரிக்கும் பொழுது எதிர்பாரா விதமாக உராய்வு ஏற்பட்டதன் விளைவாக இந்த வெடி விபத்து நிகழ்ந்தது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் சோலை விக்னேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்தார். மேலும் இந்த வெடி விபத்தினால் ஒரு அறையானது முழுவதுமாக தகர்க்கப்பட்டது.

வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து  தீயணைப்பு துறையினர் விரைந்து மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினரும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 7 முறை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்துகளில் இதுவரை 17 பட்டாசு தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தொடர் விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டாலும், இது போன்ற விபத்துகள் பெரும்பாலும் தொடர்ந்து நீடித்த நிலையிலேயே இருக்கிறது.      


Tags : Virudhunagar district ,Sathur , Virudhunagar, Sattur, Fireworks Factory, Accident, Kills
× RELATED தென்னங்கன்றுகள் நடுவதற்கான வழிமுறைகள்: வேளாண்துறை விளக்கம்